0 0
Read Time:1 Minute, 11 Second

கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கீழடியில் 7-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. 3 குழிகள் தோண்டப்பட்டு பருகுநீர் குவளை சுடுமண்ணால் செய்யப்பட்ட மண்கலன்கள், வட்ட வடிவிலான மூடிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்த நிலையில் முதல் முறையாக தங்க ஆபரணம் கிடைத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 4 புள்ளி 5 சென்டி மீட்டர் நீளம் மற்றும் 1 புள்ளி 99 சென்டி மீட்டர் விட்டம் அளவு கொண்ட தங்கத்திலான கம்பி கண்டறியப்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %