0 0
Read Time:3 Minute, 1 Second

திருக்கடையூர் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டகம் காலனி தெருவை சேர்ந்தவர் சித்திரன்(வயது 70). கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருடைய கடைசி மகன் பிரகாஷ்(15). திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு(60) குடும்பத்தினருக்கும், சித்திரன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால் நேற்று முன்தினம் இரவு சித்திரன் தனது மகனை திட்டியுள்ளார். இதனைக்கேட்ட பிச்சைக்கண்ணு மற்றும் இவருடைய உறவினர்கள் பாலமுருகன்(35), காளியம்மாள்(32), பிரியா(30) ஜெயலட்சுமி(55) ஆகிய 5 பேரும் சேர்ந்து எங்களை ஏன் திட்டுகிறாய்? என சித்திரனிடம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிச்சைக்கண்ணு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து சித்திரனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சித்திரன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சித்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகராறின்போது காயம் அடைந்த சித்திரனின் மனைவி அஞ்சம்மாள்(60), மகன் பிரகாஷ் ஆகியோர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்கண்ணு, பாலமுருகன், ஜெயலட்சுமி, காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %