0 0
Read Time:2 Minute, 2 Second

நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் நேற்று வேலைவாய்ப்பு வழங்கக் கோரி குடும்பத்தோடு பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்க நிர்வாகி பாலமுருகன் தலைமை தாங்கினார். விஜயகுமார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போலீசாரின் ஏற்பாட்டின்பேரில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குனர் சதீஷ்பாபுவிடம் பணியின்போது இறந்த தொழிலாளர்கள் வாரிசு கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு செயல் இயக்குனர் சதீஷ்பாபு, உங்களது கோரிக்கை குறித்து என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனை ஏற்று என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %