0 0
Read Time:1 Minute, 15 Second

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததோடு மொத்தம் 22 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 36 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் 18 இருசக்கர வாகனகள், 3 ஆட்டோகள், 1 கார் என மொத்தம் 22 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %