0 0
Read Time:1 Minute, 21 Second

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஒன்பது வாரம் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஆக்கூர் கிராமத்தில் பவுன்ராஜ் என்பவர் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %