0 0
Read Time:2 Minute, 21 Second

ராமநத்தம் அருகே, உள்ள ஆ‌.குடிக்காட்டைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகன் பெரியசாமி(வயது 48). விவசாயிகளான இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி அவரது மனைவியுடன் வீட்டின் உள்ளேயும், பழனிமுத்து(68) தனது மனைவியுடன் வீட்டுக்கு வெளியேயும் உறங்கினார்கள்.

அப்போது நள்ளிரவில் இரு வீட்டின் பின்பக்க கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பழனிசாமியின் வீட்டின் அறையில் பீரோவில் இருந்த 4½ பவுன் நகைகள், பெரியசாமி வீட்டின் அறையில் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதோடு, அங்கிருந்த இரும்பு பெட்டியை வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு எடுத்து சென்று உடைத்து பார்த்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அங்கேயே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

பின்னர் நேற்று காலையில் 2 வீடுகளின் பின்பக்க கதவுகளும் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை, மகன் இருவரும் அறையில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். திரு டுபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %