0 0
Read Time:2 Minute, 17 Second

வலங்கைமான் அருகே லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் சிறுவன் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம்,வலங்கைமானை அடுத்த கல்விக்குடி மேல தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பசுபதி ஈஸ்வரன் (வயது 17). அதே பகுதியை சேர்ந்த தீபன் (16), கலையரசன் (15), ராகவன் (16). நண்பர்களான இவர்கள் 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவிந்தகுடியில் இருந்து கல்விக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை பசுபதி ஈஸ்வரன் ஓட்டிச்சென்றார். அப்போது எதிரே திருகருக்காவூர் பகுதியில் இருந்து கோவிந்தகுடியை நோக்கி சென்ற லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதை தொடர்ந்து லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பசுபதி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தீபன், கலையரசன், ராகவன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், சிவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோடு ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %