0 0
Read Time:1 Minute, 25 Second

சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்துக்குட்பட்ட 66 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தொண்டாங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, புல்லூரில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த அவர் ம.கொத்தனூரில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, உறிஞ்சு குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

அப்போது கட்டுமான பொருட்களின் தரம், திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மங்களூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சண்முக சிகாமணி, தண்டபாணி, என்ஜினீயர்கள் சண்முகம், மணிவேல், கார்த்திக், மேற்பார்வையாளர் தனசேகர் ஆகியோா் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %