0 0
Read Time:1 Minute, 56 Second

விருத்தாசலம் அடுத்த, ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 44). இவரது மகள் சவுந்தர்யா (18). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சவுந்தர்யாவும், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் அருண்துரை(19) என்பவரும் காதலித்து வந்தது, பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை உறவு முறை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று, இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.

அதில் சவுந்தர்யா மட்டும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது, செங்குட்டுவனுக்கு் தற்போது தான் தெரியவந்தது.

இதுபற்றி செங்குட்டுவன் ஆலடி போலீசில், அருண்துரை, அவரது தந்தை முருகானந்தம் (49), தாய் நதியா, ஆதரவாளர்கள் நவீன்ராஜ், தர்மதுரை, பாண்டியன் ஆகியோர் மீது புகார் செய்தார்.

அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக அருண்துரை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முருகானந்தம், நதியா, நவீன்ராஜ், தர்மதுரை, பாண்டியன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %