0 0
Read Time:1 Minute, 18 Second

சென்னை முகப்பேரை சேர்ந்த ஆகாஷ், கிண்டி கத்திபாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு காரில் சென்றுள்ளார்.

கல்லூரி மாணவரை மது அருந்த அனுமதி அளிக்காததால், காரை வேகமாக ஓட்டி ஹோட்டலின் இரும்பு கேட்டை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, முகப்பேரை சேர்ந்த ஆகாஷ், கிண்டி கத்திபாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு காரில் சென்றுள்ளார். வயது குறைவாக இருந்ததால், அவரை ஹோட்டல் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

கோபத்துடன் வெளியேறிய அவர், கார் மூலம் ஹோட்டலின் இரும்பு கேட் மீது வேகமாக மோதியுள்ளார். வேகமாக இரும்பு கேட்டுடன் வெளியேறிய கார், சாலையின் நடுவில் நின்றது.

மாணவரை கைது செய்து, சாலையில் இருந்து காரை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %