0 0
Read Time:1 Minute, 22 Second

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை (தெற்கு) மண்டல கமிஷனர் பி.ஹன்ஸ்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை (தெற்கு) மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதி, வருங்கால வைப்பு நிதி சட்டப்படி சந்தாதாரர்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு விரைவான தீர்வை எட்டும் வகையில் ‘நிதி ஆப்கே நிகத்’ என்ற பெயரில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், இந்த மாதத்துக்கான முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெறும். தீர்க்கப்படாத குறைகளைக் கொண்ட எந்தவொரு பங்குதாரர்களும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய ஆவணங்களுடன் வந்து தீர்வை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %