0 0
Read Time:1 Minute, 17 Second

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் பொன்ராஜ்.

இவர் கடந்த 3-ந் தேதி மணப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்ராஜ் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

இது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தலைமறைவான ஆட்டோ டிரைவரை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து வலைவீசி தேடி வந்தனர்.

விசாரணையில், இது தொடர்பாக போரூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுதர்சன் (வயது 65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %