0 0
Read Time:1 Minute, 14 Second

ஜம்மு-காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

இதேபோன்று சிர்ஹாமாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதியான நிசார் தார் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %