0 0
Read Time:1 Minute, 45 Second

கொள்ளிடம் அருகே, உள்ள கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், சின்னகொட்டாய்மேடு கிராமத்தில் சொந்தமாக இறால் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையில் இறால்களுக்கு ஆக்சிஜன் ெகாடுக்கும் எந்திரம் விசிறியுடன் நீரின் மேல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கும். இந்த எந்திரம் மின்சாரத்தில் இயங்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், இறால் பண்ணைக்கு நேற்று வந்த முருகன் ஆக்சிஜன் கொடுக்கும் எந்திரத்தை இயக்க முயன்றபோது நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சுவிட்ச் மற்றும் பலகையில் ஈரப்பதம் இருந்ததால் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி யது. இதில், அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகனுக்கு உஷா (40) என்ற மனைவியும், துளசிதர்ஷன் (6) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %