0 0
Read Time:1 Minute, 36 Second

விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கடைக்கு வந்த விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரேஷன் கடை விற்பனையாளர் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே ரேஷன் கடையை திறப்பதாகவும், சரியான முறையில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %