0 0
Read Time:1 Minute, 11 Second

சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதி இளையாளூர் கிராமம் வடகரை மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் வசதி இல்லை.

இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %