0 0
Read Time:2 Minute, 3 Second

சீர்காழி அருகே, அண்ணன் பெருமாள் கோவில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

துணைத்தலைவர் முத்துராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் தங்கசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் உள்ளிட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் சீர்காழி வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %