0 0
Read Time:1 Minute, 50 Second

கொள்ளிடம்

கொள்ளிடம் அருகே சாலையை சீரமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல்மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரிலிருந்து ஆனந்தகூத்தன், சோதியக்குடி, கீரங்குடி வழியாக மாதிரவேளுர் செல்லும் தார்ச்சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தாமல் உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை மேம்படுத்தக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்திலலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை:

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் புத்தூரிலிருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %