0 0
Read Time:1 Minute, 32 Second

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

பின்னர் இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தது வதந்தி என்று தெரியவந்தது.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு பேசியவரின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் பேசியவர் புதுப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 61) என்பதும், மதுபோதையில் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து சிவப்பிரகாசத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %