0 0
Read Time:1 Minute, 41 Second

சென்னை, மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (வயது 24). இவர், வேளச்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். காந்திராஜா, கடந்த சில ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் சூதாடி சுமார் ரூ.2 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திராஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியின் கொக்கியில் நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவரது வீட்டுக்கு தண்ணீர் கேன் போட வந்த நபர், நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அங்கு காந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குமரன் நகர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று காந்திராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %