0 0
Read Time:1 Minute, 56 Second

பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜன்(வயது 52). இவருடைய மகள்கள் கவுசல்யா(19), பிரியதர்ஷினி(15). இதில் கவுசல்யா நெய்வேலியில் உள்ள கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டும், பிரியதர்ஷினி நெய்வேலியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கவுசல்யாவும், பிரியதா்ஷினியும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரியதர்ஷினி ஓட்டினார்.

பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இதில் கவுசல்யா, பிரியதர்ஷினி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தகுமார்(32) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாாின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %