0 0
Read Time:1 Minute, 51 Second

கடலூர் ஹேண்ட்பால் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அழைப்பிதழ் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. தொடர்ந்து நடந்த போட்டியில் நெய்வேலி மருங்கூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடத்தை பிடித்தது.

சென்னை சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2-வது இடத்தையும், புதுச்சேரி பி.என்.பாளையம் கருணாஸ் ஸ்போர்ட்ஸ் அணி 3-வது இடத்தையும், கடலூர் ஹேண்ட்பால் கிளப் 4-வது இடத்தையும் பிடித்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. விழாவுக்கு கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளரும், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனருமான விஜயசுந்தரம் தலைமை தாங்கினார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேசிய கூடைப்பந்து விளையாட்டு வீரர் தங்கதுரை, கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, பொன்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட ஹேண்ட்பால் கழக செயலாளர் அசோகன், பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %