0 0
Read Time:1 Minute, 58 Second

ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீமுஷ்ணம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவைக் கூட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஞானசங்கரன், தெய்வநாதன், தெய்வநாயகம், உஷாராணி, ருக்மணி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் வட்ட தலைவர் ஜெயவேல் வரவேற்றார். வட்ட செயலாளர் சாரங்கன் வேலை அறிக்கையையும், வட்ட பொருளாளர் திருநாவுக்கரசு நிதிநிலை அறிக்கையும், முன்னாள் வட்ட செயலாளர் அருள் சத்தியதாஸ் அறிக்கையை விவரித்தும் உரையாற்றினர். மாவட்ட செயலாளர் தீனபந்து தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட தலைவர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கிளை கருவூலம், பாரத ஸ்டேட் வங்கி அமைக்க வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணைத்தலைவர் மாதவன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %