0 0
Read Time:2 Minute, 5 Second

திருவொற்றியூர், சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரைச் சேர்ந்தவர் கவியரசன். தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் பார்த்தீபன் (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன், காற்றுக்காக வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், வீட்டின் வெளியே படுத்து இருந்த பார்த்தீபனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பார்த்தீபன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

நேற்று அதிகாலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்தீபனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பார்த்தீபன் வெட்டப்பட்டாரா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய வந்த மர்ம நபர்கள், ஆள்மாறாட்டத்தில் பார்த்தீபனை வெட்டினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %