0 0
Read Time:1 Minute, 5 Second

திட்டக்குடி அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமுளை ரோட்டில் நாளங்காடி தெரு ஆலமரம் அருகே நின்றுகொண்டிருந்த சிறுவன் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தான்.

உடனே போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனை அப்பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %