0 0
Read Time:1 Minute, 22 Second

மணல்மேடு அருகே, உள்ள கடலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது சாலிஹ். இவருடைய மகன் அப்துல் பஹத்(வயது 19). இவர் கடலங்குடி கடைவீதியில் சூப் மற்றும் சிக்கன் வருவல் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று கடை மூடப்படும் நேரத்தில் சதீஸ் என்பவர் அங்கு வந்து அப்துல் பஹத்திடம் சிக்கன் வருவல் கேட்டார். அதற்கு அப்துல் பஹத் சிக்கன் வருவல் தீ்ர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சதீஸ் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த எண்ணெய் சட்டியை தூக்கி வீசியும், அங்கிருந்த தராசை உடைத்தும் தகராறு செய்ததோடு, அப்துல் பஹத்தை கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணல்மேடு போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து கடலங்குடியை சேர்ந்த சதீஷ் (27), முத்துமாணிக்கம் (29), விஜய் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %