0 0
Read Time:1 Minute, 21 Second

விருத்தாசலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது.

விருத்தாசலம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கோட்டாட்சியர் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுரவ செயலாளர் வக்கீல் மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார்.

குமாரமங்கலம், பொன்னாலகரம், தேவங்குடி, பூந்தோட்டம், வல்லியம், முதனை, ஓலையூர், கோட்டேரி, சாத்துக்கூடல் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 26 குடும்பத்தினருக்கு கோட்டாட்சியர் ராம்குமார் தார்ப்பாய் வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் அழகானந்தம், ஸ்டாலின், அகிலன், மணிபாலன், அகிலா, மணிகண்டன், ரேகாஸ்ரீ, ராஜ்சங்கர், அருண்குமார், மாரிமுத்து, வீரசுந்தர், தினேஷ், சண்முகம், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %