0 0
Read Time:1 Minute, 3 Second

சென்னை, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, திருவொற்றியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழாவும், அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேனா, பென்சில், கரும்பலகைகள் மற்றும் கல்வி உபகரணங்களை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

எர்ணாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளில் மின்விசிறிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், நிர்வாகிள் தங்கமுத்து, ராஜேஷ், கிராம நல சங்க செயலாளர் சசிதரன், எர்ணாவூர் நாடார் உறவின்முறை செயலாளர் சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %