0 0
Read Time:1 Minute, 11 Second

பூந்தமல்லி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). வடபழனியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது சட்டை பாக்கெட்டிலிருந்து ஒருவர் செல்போன் திருடுவதை அறிந்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் செல்போன் திருடியவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராஜா(30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %