0 0
Read Time:1 Minute, 23 Second

ஆலந்தூர், சென்னை மாநகராட்சி பெருங்குடி 14-வது மண்டலம் மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டிற்கு சொத்து வரி போட 187-வது வட்ட வரி விதிப்பாளர் மற்றும் வரி வசூலிப்பாளர் ஆகியோர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் பேரம் பேசி ரூ.14 ஆயிரம் தர சம்மதித்தார். ஆனால் பணம் தர விரும்பாத அவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு லவக்குமார், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கொண்ட தனிப்படையினர் ரசாயனம் தடவிய ரூ.14 ஆயிரம் பணத்தை தந்தனர். பின்னர் புழுதிவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர்.

அங்கு வரி வசூலிப்பாளர் ராஜாராமன் (40) என்பவரிடம் ரூ.14 ஆயிரம் தந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக ராஜாராமனை கைது செய்தனர். வரி விதிப்பாளரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %