0 0
Read Time:1 Minute, 19 Second

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மயிலாடுதுறை, தீத் தொண்டு வாரத்தையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டு வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு கையாள்வது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?, கியாஸ் சிலிண்டரின் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

இதில், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %