0 0
Read Time:1 Minute, 35 Second

வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சிகொள்ளிடத்தில் நடந்தது.

கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலகத்தில், வட்டார வளமையம் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளர் ஞானபுகழேந்தி வரவேற்றார். பயிற்சியில் உறுப்பினர்களின் தேர்வின்போது மொத்த உறுப்பினர்களில் 10 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்றும், இக்குழுவில் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் தலைமையிலான ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். தொடர்ந்து அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %