0 0
Read Time:1 Minute, 14 Second

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

வீடுகள் மற்றும் கடைகளில் வைத்துள்ள பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடி விடுகின்றன. மேலும், கடைகளுக்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி வருபவர்களிடம் அதனை பிடுங்கிக் கொண்டு சென்று விடுகின்றன.

அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடமும் குரங்குகள் தொல்லை கொடுக்கின்றன. ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %