0 0
Read Time:1 Minute, 22 Second

தஞ்சை அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் நடராஜன் (வயது40) என்பவர் ஓட்டி வந்தார்.

செங்கிப்பட்டியை அடுத்துள்ள புதுகரியாப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது கட்டளை வாய்க்கால் தடுப்புச்சுவரில் பஸ் மோதியது. இதில் பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தை ெ்தாடர்ந்து பஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %