0 0
Read Time:1 Minute, 46 Second

விருதாச்சலத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் இருக்கும் இடத்தை பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆக்கிரமித்து இருக்கும் அவல நிலை.

இதனால் பல்வேறு வணிக நிறுவனங்களில் அடிக்கடி மின்னழுத்தம் ஏற்பட்டு பீஸ் போவதாக புகார்

விருதாச்சலம் அரசு பேருந்து பணிமனை எதிரே இருக்கும் உயர் மின்னழுத்த பெட்டி மின் கம்பம் இருக்கும் இடத்தில் முட்புதர்களும் மரக்கிளைகளும் கம்பத்தை ஆக்கிரமித்து இருப்பதால் அடிக்கடி அப்பகுதியில் மின் அழுத்தம் ஏற்பட்டு பீஸ் போவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மின்னழுத்த பெட்டி அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை எல்ஐசி நிறுவனம் கிறிஸ்தவ ஆலயம் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் இருப்பதால் இந்த மின்னழுத்த கம்பத்தில் முட்புதர்கள் மரக்கிளைகள் மின்கம்பியில் உராசி வருவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பீஸ் போய் வருவதாகவும் இதனால் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் இந்த இடத்தை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %