0 0
Read Time:2 Minute, 6 Second

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;
திருக்களாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் பங்கேற்றனர். செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

செம்பனார்கோவில் ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், ஜோதி குருக்கள், ஆயப்பாடி மதரசா மனாருல் ஹுதா இமாம் கமாலுதீன், தரங்கம்பாடி பேராயர் சாம்சன், ஆகியோர் பங்கேற்று, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, துஆ ஓதி, சிற்றுண்டி அருந்தி நோன்பு திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமிர்த.விஜயகுமார், ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள், அனைத்து சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %