0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவாளி. இவரது மனைவி திலகவதி (வயது 56). இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மாலை பட்டமங்கல புதுத்தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திலகவதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் அறிவாளி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து மயிலாடுதுறை தாலுகா, காளி அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கர்ணன் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தான், திலகவதியிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து கர்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %