0 0
Read Time:1 Minute, 47 Second

சீர்காழி அருகே, அகணி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் தமிழ்வேணி முன்னிலை வகித்தார். தோட்டக்கலை வேளாண்மை உதவி அலுவலர் குமரேசன் வரவேற்று பேசினார்.

முகாமில், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதரன் கலந்துகொண்டு தமிழக அரசு சார்பில் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பயிர் காப்பீடு கிசான் அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அட்டை பெறாத விவசாயிகளுக்கு புதிய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் வீரமணி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %