0 0
Read Time:1 Minute, 11 Second

இந்த கோவிலில் சித்திரை மாத பால்குட திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காவிரி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு செண்டை மேளங்கள் முழங்க அம்மன் வீதிஉலா நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %