1 0
Read Time:2 Minute, 49 Second

மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் மே தின கொடியேற்று விழா ! , , மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அதன் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில், சங்கக் கொடியினை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமங்கலம் இராம. இளங்கோவன் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன் , நாட்டுப்புறக் கலைஞர்கள் மாவட்ட செயலாளர் கிங் பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தென்னக ரயில்வே கோட்ட தொழிற்சங்க தலைவர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். பொது தொழிலாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அருந்ததியர்கள், கீற்று உற்பத்தியாளர்கள், ஓவியர்கள், தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ஜல்லி ஏற்றுவோர் இறக்குவோர் சங்கத்தினர், நாட்டுப்புறக் கலைஞர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், உடற்பயிற்சி தற்காப்பு கலை பயிற்றுனர்கள், திருநங்கைகள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.

சங்க செயலாளர் அ.அப்பர்சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம், சீர்காழி சங்கர், குத்தாலம் கராத்தே ஏ பி கிருஷ்ணகுமார், முன்னாள் ராணுவ வீரர் பெத்த பெருமாள், ரிக்ஷா தங்க பழனிச்சாமி, அருண், ஜெயப்பிரியா ரவீந்திரன், அடிய மங்கலம் கே பாஸ்கர், ஸ்டிக்கர் ரமேஷ், ஸ்டிக்கர் செல்வம்,தரங்கம்பாடி அருண்குமார், பொறியாளர் அஸ்வின்ராஜ், ஆசிரியர் கந்தன், ஜனபுனிதர், உள்பட ஏராளமானோர் பங்கேற்றார்கள். சங்கப் பொருளாளர் வைத்தீஸ்வரன்கோவில் சாமிநாதன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %