0 0
Read Time:1 Minute, 7 Second

புதுப்பேட்டை அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பேட்டை அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் (வயது 25). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் விஷம் குடித்து விட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரந்தாமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பரந்தாமன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %