தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் மே 7 ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அவருக்காக ஒரு பெண் தனது நாக்கை வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டி கொண்டார்.
அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அடுத்து நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.