0 0
Read Time:1 Minute, 11 Second

கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம் மிகுந்த மனவேத னையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் பழனி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %