0 0
Read Time:3 Minute, 22 Second

திருக்கடையூர், வெயில் சுடடெரிப்பதால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானிய கடன் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம்; திருக்கடையூர், கிடங்கல், ஆக்கூர், பிள்ளைபெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், சிங்கனோடை, ராதாநல்லூர் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலமே சிறந்ததாகும்.

வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் அதிகளவில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மேற்கண்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கிள்ளியூர் கிராமத்தை சேர்ந்த செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது, தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாக உள்ளது. குறிப்பாக கோடைக் காலம் செங்கல் தயாரிப்பதற்கு ஏற்றதாகும்.

அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணோடு ஆற்றிலிருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணையும் கலந்து பதப்படுத்தி அச்சுகளில் போட்டு செங்கல்களை வார்த்து எடுத்து வெயிலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கல்களை சூளையில் அடுக்கி வைத்து தீ மூட்டி வேக வைப்போம்.

பின்னர் செங்கல்களை விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். ஏப்ரல், மே காலங்களில் சில நேரங்களில் கோடை மழைபெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி செங்கல்களை மூடி வைப்போம். ஆனாலும் மழைநீர் சூழ்ந்து செங்கல்கள் கரைந்துவிடுகின்றன, மேலும் செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மானிய கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %