0 0
Read Time:1 Minute, 12 Second

ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

இதனால் பின்னால் வந்த மோனேசின் கார், லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோனேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %