0 0
Read Time:1 Minute, 30 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 892 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு
வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 6,558 மாணவர்களும், 6,334 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 892 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு எழுதினர். இதில் 82 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர்.இதற்கான மாவட்டத்தில் 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 வரை நடந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் பறக்கும் படையினர் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %