0 0
Read Time:1 Minute, 23 Second

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வந்தார்.

இந்த நிலையில் செல்வக்குமார் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மழவராயநல்லூர் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு கொண்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவா்கள் பார்த்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமார் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %