0 0
Read Time:1 Minute, 24 Second

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் அப்பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %