1 0
Read Time:2 Minute, 0 Second

கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் லோகநாதன் (வயது 24). தொழிலாளி.

இவர் கடலூர் முதுநகர் அடுத்த அன்னவெளி கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அன்னவெளி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற மினிலாரி ஒன்று லோகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மினி லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சங்கர் (47) படுகாயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்த புகாாின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %