0 0
Read Time:1 Minute, 21 Second

கடலூர் முதுநகர், மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி, தற்போது அமலில் உள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலம் சிறிய ரக பைபர் படகுகளுக்கு பொருந்தாததால், கடலூர் துறைமுகத்தில் இருந்து பைபர் படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் மைல் தூரம் சென்று கடலில் மீன் பிடித்து வருவார்கள்.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கடலூர் துறைமுகத்தில் இருந்து பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் பைபர் படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %